அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்



⭐⭐அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய  அல்லாஹ்வின் திருப்பெயரால்....⭐⭐


➡️நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான். அல்குர்ஆன் 3:9



✍அல்லாஹ்வின் வாக்குறுதியே என்றும் உண்மையானது. அதில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. உண்மையாளனான அல்லாஹ் தம் அடியார்களுக்கு பல வாக்குறுதிகளை தந்துள்ளான். அதில் இந்த உலகில் அடியார்களின் தன்னம்பிக்கையை திடப்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔴அடியார்கள் நினைவு கூறும்போது அல்லாஹ்வும் தம் அடியார்களை நினைவு கூறுகின்றான்.



➡️அல்குர்ஆன் 2:152 ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன்.



✍ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமானவர்கள் தம்மை நினைவு கூறுவதை விரும்புவான்.  ஒரு விசுவாசிக்கு தன்னை படைத்தவன் தன்னை பற்றி நினைவு கூறுவதை இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் காட்டிலும் விரும்புவான். அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல  அல்லாஹ், அடியார்கள் தம்மை நினைவு கூறும்போது தமது அடியார்களை தாமும்  நினைவு கூறுவதாக வாக்களித்துள்ளான் . மேலும் அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமாகவே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்று அல்லாஹ் தம் திருமறையில் கூறியுள்ளான்.



7405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔴பிரார்த்தனைக்கு பதிலளிக்கின்றான்.

➡️அல்குர்ஆன் 40:60 உங்கள் இறைவன் கூறுகிறான்; "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்;

✍தேவைகளிலும் துன்பங்களிலும் பயத்திலும் ஒருவர் தம்முடைய இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யும் போது அவரது பிரார்த்தனைக்கு பதிலளிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இந்த வாக்குறுதி ஒரு விசுவாசியை மாபெரும்  பலம் வாய்ந்தவனாக மாற்றுகிறது. அல்லாஹ் பதிலளிப்பான் என்ற நம்பிக்கை எந்த நேரத்திலும் ஒரு விசுவாசிக்கு  மன அமைதியின் பக்கம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

➡️(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔴பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக இல்லை.

➡️அல்குர்ஆன் 8:33 மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.


➡️நபியே நீங்கள் கூறுங்கள்| தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பு கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் அருள்பாளிப் போனுமாக இருக்கிறான். (39:53)

நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைக்கும், பாவமன்னிப்புக்கும் பதிலளிக்கக் கூடிய ஒரே கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவனிடமே கையேந்த வேண்டும். மேலும் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் நம்மை நமது பாவத்தின் காரணமாக அழிப்பவனாக இல்லை என்ற வாக்குறுதியை இங்கு தருகின்றான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔴நன்றி செலுத்தும்போது அல்லாஹ் தமது அருளை அதிகமாக்குவேன் எனும் வாக்குறுதி

➡️அல்குர்ஆன் 14:7 நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்;

✍கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழமுடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.  அத்தகைய அருளானது அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தும்போது அதனை அல்லாஹ் இன்னும் அதிகமாக்குகின்றான்.

➡️ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்