இயேசு ஆல்பா ஒமெகா இல்லை-பாகம் 4
இயேசு ஆல்பா ஒமெகா இல்லை-பாகம் 4
வெளி 22:13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
இந்த வசனத்தையும் கிறிஸ்தவர்கள் தவறான முறையில் இயேசுவோடு சம்பந்தப்படுத்தி இயேசுவை ஆல்பா ஒமெகா என்கின்றனர். இந்த வசனம் கர்த்தரை குறித்து தான் பேசுகிறது என்பதை இந்த அத்தியாயத்தை படிப்பவர் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு முந்தைய வசனத்தில் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது இயேசுவின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகின்றனர்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று தூதன் வழியாக பேசுவது கர்த்தர் தான் என்பது இந்த அத்தியாயத்தில் 6 மற்றும் 7 வசனங்களை படிப்போர் புரிந்து கொள்வர்.
6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகியதேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தேவன் கர்த்தர் என்பது பழைய ஏற்பாட்டை படித்த அனைவருக்கும் தெரியும். இன்னும் எல்லா தீர்க்கதரிசியும் கர்த்தர் ஒருவரையே வணங்கி வந்தனர் என்பதையும் பழைய ஏற்பாட்டில் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த தீர்கக்தரிசிகளின் தேவனாகிய கர்த்தர் தான் தம்முடைய தூதன் மூலமாக "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று இங்கு சொல்கிறார். இன்னும் பழைய ஏற்பாட்டிலும் கர்த்தர் வருவார் என்று சொல்லப்படும் வசனத்தையும் நம்மால் காண முடிகிறது.
சங்கீதம் 96:13. அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
ஏசாயா 40:10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
நியாயம்தீர்க்க கர்த்தர் வருவதாக பழைய ஏற்பாடும் தெளிவாக சொல்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களோ எப்படியாவது இயேசுவை இறைவன் என்று காட்டுவதற்காக இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பைபிள் அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு எதிராக நிற்கிறது. வெளி 22:13 வசனமும் கர்த்தரை பற்றி தான் பேசுகிறது தவிர இயேசுவை பற்றியல்ல. ஆல்பா ஒமெகா என்பது கர்த்தரை தான் குறிக்கும என்பதற்கு பைபிளே போதுமான ஆதாரம்.
வெளி 22:13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
இந்த வசனத்தையும் கிறிஸ்தவர்கள் தவறான முறையில் இயேசுவோடு சம்பந்தப்படுத்தி இயேசுவை ஆல்பா ஒமெகா என்கின்றனர். இந்த வசனம் கர்த்தரை குறித்து தான் பேசுகிறது என்பதை இந்த அத்தியாயத்தை படிப்பவர் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு முந்தைய வசனத்தில் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது இயேசுவின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகின்றனர்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று தூதன் வழியாக பேசுவது கர்த்தர் தான் என்பது இந்த அத்தியாயத்தில் 6 மற்றும் 7 வசனங்களை படிப்போர் புரிந்து கொள்வர்.
6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகியதேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தேவன் கர்த்தர் என்பது பழைய ஏற்பாட்டை படித்த அனைவருக்கும் தெரியும். இன்னும் எல்லா தீர்க்கதரிசியும் கர்த்தர் ஒருவரையே வணங்கி வந்தனர் என்பதையும் பழைய ஏற்பாட்டில் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த தீர்கக்தரிசிகளின் தேவனாகிய கர்த்தர் தான் தம்முடைய தூதன் மூலமாக "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று இங்கு சொல்கிறார். இன்னும் பழைய ஏற்பாட்டிலும் கர்த்தர் வருவார் என்று சொல்லப்படும் வசனத்தையும் நம்மால் காண முடிகிறது.
சங்கீதம் 96:13. அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
ஏசாயா 40:10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
நியாயம்தீர்க்க கர்த்தர் வருவதாக பழைய ஏற்பாடும் தெளிவாக சொல்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களோ எப்படியாவது இயேசுவை இறைவன் என்று காட்டுவதற்காக இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பைபிள் அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு எதிராக நிற்கிறது. வெளி 22:13 வசனமும் கர்த்தரை பற்றி தான் பேசுகிறது தவிர இயேசுவை பற்றியல்ல. ஆல்பா ஒமெகா என்பது கர்த்தரை தான் குறிக்கும என்பதற்கு பைபிளே போதுமான ஆதாரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக