இயேசு ஆல்பா ஒமெகா இல்லை - பாகம் 3

இயேசு ஆல்பா ஒமெகா இல்லை 






இயேசு ஆல்பா ஒமெகா இல்லை என்பதை ஏற்கனவே இரண்டு பதில்களில் இருவேறு வசனங்களை குறித்து பேசியிருந்தோம். இப்போது வெளிப்படுத்தின சுவிசேஷம் 21:6ஐ பற்றி பார்ப்போம்.


இந்த வசனம் இயேசுவை ஆல்பா ஒமெகா என்று சொல்வதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மை நிலையோ வேறு மாதிரி இருக்கிறது. வெளிப்படுத்தின சுவிசேஷத்தை பொருத்தவரையில் கர்த்தர், இயேசு, தூதன் மற்றும் யோவான் என  4 பேச்சாளர்கள் உள்ளனர். அந்த வசனத்துக்குரிய  பேச்சாளர் யார் என்பதை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் இயேசுவை ஆல்பா என்றும் ஒமெகா என்றும் கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாக இருக்கிறது என்பதை முன்பே நாம் சொல்லியிருந்தோம். அதேப் போன்ற தவறை தான் இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர்.

எந்த வசனத்தை முன்பின் வசனங்களோடு சேர்த்து படிக்கும்போது தான் அந்த வசனம் சொல்ல வந்த விசயத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இந்த வசனத்தையும் அதன் முன்பின் வசனங்களோடு படிக்கும்போது கர்த்தரை பற்றி தான் பேசுகிறது என்பதை பாமரனும் புரிந்து கொள்ளலாம்.

வெளி 21:6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.


மேற்கண்ட  வெளி 21:7 வசனத்தில்  "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று சொல்வதாக அமைந்துள்ளது. இது யாரை குறித்து பேசுகிறது என்பதை கிறிஸ்தவத்தின் அடிப்படை தெரிந்த அனைவருக்கும் தெரியும். பிதா தான் தேவன் என்றும் குமாரன் என்பது இயேசுவை குறிக்கும் என்பதும். வெளி 21:6&7 இந்த இரண்டு வசனங்களிலும் ஒரு நபர் தான் பேசுகிறார். அதாவது கர்த்தர் தான் பேசுகிறார். இந்த வசனத்தின் படி கர்த்தருக்கு குமாரனாக இயேசு இருப்பார்.  இயேசுவுக்கு தேவனாக தான் இருப்பதாக கர்த்தர் சொல்கிறார். அதே கர்த்தர் தான் வெளி 21:6 ல் தன்னை ஆல்பா என்றும் ஒமெகா என்றும் சொல்கிறார்.


வெளி 21:7 வசனம் இன்னொரு உண்மையையும் தெளிவுப்படுத்துகிறது. அதாவது குமாரனுக்கு(இயேசுவுக்கு) தேவனாக கர்த்தர் இருப்பார் என்பதே அந்த உண்மை. குமாரன் என்ற சொல் இயேசுவுக்கு பயன்படுத்தப்படுவதால் கர்த்தருக்கு இனையாக இயேசுவை  இறைவன் என்று சொல்லும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை இந்த வசனம் பொய்யாக்குகிறது.

ஆதலால் இந்த வசனத்தை கொண்டும் இயேசுவை ஆல்பா ஒமெகா என்று சொல்ல முடியாது.


இறைவன் நாடினால் வேறொரு பதிவில் வெளி 22:13 வசனம் குறித்து பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்