இயேசு ஆல்பா ஒமெகா இல்லை.பாகம் 2
இயேசு ஆல்பா ஒமெகா இல்லை.
வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8, 11; 21:6; மற்றும் 22:13 இல் இயேசு தன்னைத்தானே ஆல்பா ஒமெகா என்று வெளிப்படுத்தினார் என்பதாக பெரும்பாலான கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. அதன் உண்மை தன்மையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாம் ஏற்கனவே வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:11இன் மூலப்பிரதியில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை என்பதை பார்த்து இருந்தோம். Rev 1:11 இல் சொல்லப்பட்ட ஆல்பா மற்றும் ஒமெகா என்பது இடைச்செருகல் என்பதை பைபிள் அறிஞர்களே ஏற்றுக் கொண்ட விசயம். அதனால்தான் பெரும்பாலான பைபிள் பாதிப்புகளில் அந்த வசனத்தில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை.
வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8
மேற்கண்ட வசனம் கர்த்தரை பற்றி பேசுகிறது. இயேசுவை பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை. அதேசமயம் இந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதற்கு பைபிளே போதுமான ஆதாரமாகும். வெளிப்படுத்தின சுவிசேஷத்தை பொருத்தவரையில் கர்த்தர், இயேசு, தூதன் மற்றும் யோவான் என 4 பேச்சாளர்கள் உள்ளனர். அந்த வசனத்துக்குரிய பேச்சாளர் யார் என்பதை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் இயேசுவை ஆல்பா என்றும் ஒமெகா என்றும் கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாக இருந்தது. ஒரு வசனத்தின் பேச்சாளர் யார் என்பதை அந்த வசனத்தின் முன்பின் வசனங்களை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் Rev 1:8 வசனத்துக்கும் முந்தைய வசனத்தோடு(1:7) இயேசுவின் பேச்சு முடிந்து விடுகிறது.
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Rev 1:8 இன் பேச்சு கர்த்தருக்கு சொந்தமானது.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Rev 1:7 இல் சொல்லப்பட்டுள்ள "சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்ற நாமம் கர்த்தருக்கு மட்டுமே சொந்தமானது. முழு பைபிளில் எங்கு தேடினாலும் இந்த நாமம் கர்த்தரை தவிர வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை.
ஆதியாகமம் 17:1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தன்னை வெளிப்படுத்திய அதே பெயரில் வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8லும் கர்த்தர் தன்னை வெளிப்படுத்துகிறார்.
ஆதலால் இந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதையும் இந்த வசனத்தின் பேச்சாளர் கர்த்தர் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இறைவன் நாடினால் Rev 21:6; மற்றும் 22:13 வசனங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8, 11; 21:6; மற்றும் 22:13 இல் இயேசு தன்னைத்தானே ஆல்பா ஒமெகா என்று வெளிப்படுத்தினார் என்பதாக பெரும்பாலான கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. அதன் உண்மை தன்மையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாம் ஏற்கனவே வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:11இன் மூலப்பிரதியில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை என்பதை பார்த்து இருந்தோம். Rev 1:11 இல் சொல்லப்பட்ட ஆல்பா மற்றும் ஒமெகா என்பது இடைச்செருகல் என்பதை பைபிள் அறிஞர்களே ஏற்றுக் கொண்ட விசயம். அதனால்தான் பெரும்பாலான பைபிள் பாதிப்புகளில் அந்த வசனத்தில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை.
வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8
மேற்கண்ட வசனம் கர்த்தரை பற்றி பேசுகிறது. இயேசுவை பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை. அதேசமயம் இந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதற்கு பைபிளே போதுமான ஆதாரமாகும். வெளிப்படுத்தின சுவிசேஷத்தை பொருத்தவரையில் கர்த்தர், இயேசு, தூதன் மற்றும் யோவான் என 4 பேச்சாளர்கள் உள்ளனர். அந்த வசனத்துக்குரிய பேச்சாளர் யார் என்பதை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் இயேசுவை ஆல்பா என்றும் ஒமெகா என்றும் கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாக இருந்தது. ஒரு வசனத்தின் பேச்சாளர் யார் என்பதை அந்த வசனத்தின் முன்பின் வசனங்களை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் Rev 1:8 வசனத்துக்கும் முந்தைய வசனத்தோடு(1:7) இயேசுவின் பேச்சு முடிந்து விடுகிறது.
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Rev 1:8 இன் பேச்சு கர்த்தருக்கு சொந்தமானது.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Rev 1:7 இல் சொல்லப்பட்டுள்ள "சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்ற நாமம் கர்த்தருக்கு மட்டுமே சொந்தமானது. முழு பைபிளில் எங்கு தேடினாலும் இந்த நாமம் கர்த்தரை தவிர வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை.
ஆதியாகமம் 17:1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தன்னை வெளிப்படுத்திய அதே பெயரில் வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8லும் கர்த்தர் தன்னை வெளிப்படுத்துகிறார்.
ஆதலால் இந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதையும் இந்த வசனத்தின் பேச்சாளர் கர்த்தர் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இறைவன் நாடினால் Rev 21:6; மற்றும் 22:13 வசனங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக